WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

வெள்ளி, 18 மே, 2012

குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள்



குழந்தைகளின் பற்களை பாதுகாத்தல்




முதல் பல் முளைப்பது குழந்தைக்கு குழந்தை மாறுபடும். பொதுவாக பிறந்து 6 மாதங்களில் கீழ் வரிசையின் மத்தியில் முதல் பல் முளைக்கும். பிறந்து ஒரு ஆண்டு வரையிலும் கூட பல் எதுவும் முளைக்காமலே கூட இருக்கும். இரண்டறை வயதில் 20 பால் பற்கள் முளைத்துவிடும். பால் பற்கள் தற்காலிகமானவை, நிரந்தரப் பல் 6 வயது வாக்கில் முளைக்கத் தொடங்கும்.

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் முன்பே, பெற்றோர்கள் அக்கரை செலுத்த தொடங்குவது நல்லது, பல் முளைக்கும் முன்பே ஈறுகளை மென்மையான ஈரத்துணியால் உணவு கொடுத்த பிறகு சுத்தம் செய்வது முதல் படி. பல் முளைத்தவுடன் மென்மையான டூத் பிரஷ்ஷால் நாளைக்கு 2 முறை பல் விளக்கலாம். டூத் பேஸ்ட் வர்த்தக விளம்பரங்களில் காண்பிப்பது போல் நீளமாக பிரஷ் பகுதி முழுவதும் பற்பசையை போட வேண்டிய அவசியமில்லை, சிறு கீற்று போல் போட்டாலே போதுமானது. சிறு குழந்தைகள் புளோரைட் சுவைக்கு மயங்கி பற்பசையை உட்கொள்வது சகஜம், ஆனால் அதிக புளோரைட் உட்கொண்டால் பற்களில் நிரந்தரக்கறை படிந்துவிடும்.

பிறகு ஏன் பற்பசையில் புளோரைடைச் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். புளோரைட் என்பது இயற்கையாகவே சம்பவிக்கும் ஒரு கனிப்பொருள், பற் சிதைவிலிருந்து புளோரைட் பற்களை பாதுகாக்கிறது. நம் எச்சிலில் உள்ள கனிப்பொருள்கள் கூட பற்களை உறுதிப்படுத்தும், ஆனால் இதற்கும் கூட புளோரைட் தேவை. தண்ணீரிலிருந்து தேவையான புளோரைட் கிடைப்பதில்லை. இதனாலேயே பற்பசையுடன் புளோரைட் சேர்ப்பது வழக்கம்.

ஆனால் பற்பசையில் புளோரைடின் அளவு குறித்து நாம் கவனம் கொள்வது நல்லது, பற்பசையில் புளோரைடின் அளவு 500 ஞஞஆ முதல் 1000-1500 ஞஞஆ வரை இருக்கும்.

7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ஞஞஆ புளோரைட் அடங்கிய பற்பசையே சரியானது. ஏனெனில், நிரந்தரப் பற்கள் முளைக்கும்போது அதிகமான புளோரைட் பற்பசை பற்களில் நிரந்தரக் கறையை உருவாக்கிவிடும்.

குழந்தைகளின் உணவுப்பழக்க வழக்கம் பல் பாதுகாப்பில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. எச்சில், பற்களை சுத்தப்படுத்தும். ஆனால், எச்சில் ஊற நேரம் தேவை. பகலில் குழந்தைகளுக்கு தீனி அடிக்கடி கொடுக்கப்பட்டால், எச்சில் பற்களை சுத்தம் செய்ய வாய்ப்பே இருக்காது. இரண்டு உணவுகளுக்கிடையே இனிப்புகள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

பாலையோ, தண்ணீரையோ பாட்டில்களில் கொடுத்தால் குழந்தைகளின் பற்களுடன் அது நீண்ட நேரம் தொடர்பு கொண்டிருக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு வயது முடியும் தருவாயில் கோப்பையில் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவது சிறந்தது. அதே போல் படுக்கையில் குழந்தைகளை பாட்டிலுடன் கிடத்த வேண்டாம், பகலிலும் கூட குழந்தையை பாட்டிலும் கையுமாக அலைய விடுவதை தவிர்ப்பது நல்லது.

ஈறுகளில் பற்கள் முளைக்கும் போது குழந்தைகளுக்கு லேசாக வலி ஏற்படலாம் அல்லது சிறு சிறு அமளயிலும் குழந்தைகள் ஈடுபடும். பல் முளைக்கும் போது, காய்ச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் பிற நோய்கள் ஏற்படாது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

ஒரு வயது முடிந்தவுடன் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிப்பது நல்லது. இதன் மூலம் மருத்துவருக்கும் பிரச்சினைகள் முதலிலேயே தெரிந்துவிடும் என்பதோடு ரெகுலர் செக் அப்பிற்கு குழந்தையும் தயாராகிவிடும்.

குழந்தைகளுக்கு விவரம் தெரியும்போது பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பது அவசியம்.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை! டாக்டர். எம்.சபாபதி


பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறதாம்



வெள்ளி, 11 மே, 2012

சுய இன்பத்தில் 92 வீதமான பெண்களுக்கு நாட்டம் அதிகம்!


சுய இன்பத்தில் 92 வீதமான பெண்களுக்கு நாட்டம் அதிகம்!

ஆண்கள் மட்டும்தானா சுய இன்பம்... இல்லையில்லை பெண்களும் அதில் ஆண்களை மிஞ்சும் வகையில் முன்னணியில் இருப்பதாக இங்கிலாந்தின் சன் இதழ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 92 சதவீத பெண்கள் சுய இன்பத்தில் ஆர்வம் காட்டுகின்றனராம்.

1953ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 62 சதவீதமாகவும், 1979ல் எடுக்கப்பட்ட ஆய்வில் அது 74 சதவீதமாகவும் இருந்ததாக கூறும் சன், தற்போது கிட்டத்தட்ட அத்தனை பெண்களுமே சுய இன்பப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகிறது.

சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பதில் இன்னும் கூட நிறையப் பேருக்கு குழப்பமும், சந்தேகமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், பலருக்கு இது விட முடியாத பழக்கமாக மாறிப் போய் விடுகிறது. பலர் திருமணமான பிறகும் கூட சுய இன்பப் பழக்கத்தை தொடருகின்றனர். கேட்டால், விட முடியவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களால் விட முடியாமல் போவதற்கு அதில் ஏற்படும் பிடிப்பு மட்டும் காரணமல்ல, அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போவதும் கூட ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.


சரி சுய இன்பப் பழக்கம் நல்லதா, கெட்டதா ... இதுகுறித்து உளவியலாளர்கள் சொல்வதைக் கேளுங்கள்..


சுய இன்பப் பழக்கம் என்பதை கெட்டது என்றோ நல்லது என்றோ கூற முடியாது. இயற்கையான வாய்ப்புக்கு வழியில்லாத போதுதான் சுய இன்பப் பழக்கத்தை நாடுகின்றனர். அதில் அவர்களுக்கு மன திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுகிறது. அதேசமயம், இந்தப் பழக்கம் தொடர்கதையானால் அது மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு வித்திடலாம். தன்னம்பிக்கை குறையும். நம்மால் இயற்கையாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்ற சந்தேகம் வந்து விடும். எப்போதும் ஒரு விதமான குற்ற உணர்ச்சியுடன் இருக்க நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.


ஆனால் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபட்டிருப்போரோ அதை நிராகரிக்கின்றனர். நிச்சயம், குற்ற உணர்ச்சி எங்களுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, மன பாரம் குறைகிறது, உற்சாகத்துடன் அடுத்த வேலையைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.


பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவின்போது பலமுறை உச்ச நிலை ஏற்படுவது இயல்பானது. ஆனால் ஆணோ, உறவை சுருக்க முடித்துக் கொள்வதில் நம்பர் ஒன். எனவே பெரும்பாலான பெண்களுக்கு உறவில் பெரும்பாலும் திருப்தி ஏற்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு சுய இன்பம்தான் உற்ற துணையாக இருக்கிறது என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.


சுய இன்பப் பழக்கத்தால் சில உடல் ரீதியான நன்மைகளும் கூட ஏற்படுகின்றன என்கிறார்கள் டாக்டர்கள். அதாவது தொடர்ச்சியாக சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதாம்.


செக்ஸ் ரீதியாக உடல் கிளர்ச்சி அடையும் பெண்களுக்கு, அதற்கான வாய்ப்பு கிடைக்காத போது பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதற்காக தூக்க மாத்திரை உள்ளிட்டவற்றை நாடுவதை விட சுய இன்பப் பழக்கம் அவர்களை நிம்மதிப்படுத்த உதவுகிறது. எனவே அதை தவறு என்று கூற முடியாது என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.


சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்கள் செக்ஸ் உறவின்போது சிறப்பாக செயல்படுவார்கள் என்று ஒரு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது. இவர்களுக்கு தங்களது உறுப்புகள் குறித்த விழிப்புணர்வும், அனுபவமும் அதிகமாக இருக்கும். இதனால் இயற்கையான செக்ஸ் உறவின்போது இவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது பார்ட்னர்களை மகிழ்விப்பார்கள் என்கிறது அந்த புள்ளிவிவரம். மேலும் தங்களுக்கு எத்தகைய தொடுதல், உணர்ச்சியைத் தூண்டும் என்பதையும் இவர்கள் அறிந்து வைத்திருப்பதால் அதை பார்ட்னர்களிடம் கேட்டுப் பெறுவது இவர்களுக்கு எளிதாகிறதாம்.


மருத்துவ நிபுணர்களும் சரி, உளவியலாளர்களும், சுய இன்பம் குறித்து பொதுவாக கூறும் ஒரு ஆறுதலான விஷயம் - சுய இன்பப் பழக்கத்தால் பால்வினை நோய்கள் வராது, விந்தனு உற்பத்தி பாதிக்காது, பெண் பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படாது என்பதே.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்... அதை மனதில் வைத்துக் கொண்டு எதைச் செய்தாலும் சரிதான்!
-------------------------------------------------------------------------------------