WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

சனி, 21 ஜூலை, 2012

தூக்க மாத்திரைகளால் கேன்சர் ! அதிர வைக்கும் சமீபத்திய ஆய்வு!




சம்பாதிக்க வேண்டும் எனும் மன அழுத்தம் முதலில் நசுக்கித் தள்ளுவது நம் தூக்கத்தைத்தான். 'தூக்கம் என்ன தூக்கம்... ஒரு தூக்க மாத்திரை போட்டா தானாக சரி வரப்போகுது' எனும் வகையை சேர்ந்தவர்களா நீங்கள்? உங்களுக்கான விசயம் தான் இது... 'தூக்க மாத்திரைகளே கேன்சருக்குக் காரணமாகி நிரந்தரத் தூக்கத்தில் கொண்டு போய் நிறுத்திவிடலாம்' என அதிர வைக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு!
Sleep disaster'... அதாவது 'தூக்கமின்மை நோய்' என்பது பெரிய சப்ஜெக்ட். இந்த பிரச்னைக்கு தீர்வு காண பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அதை ஒரு நோயாகவே பார்ப்பதில்லை. ஏதோ தலைவலி, காய்ச்சல் போல பொதுவாக வைத்தியரிடம் மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கி விட்டு போகின்றனர். அதுதான் ஆபத்தாகும்!' என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கிருத்திகா.
நிம்மதியாகத் தூங்குவதற்காக போடும் மாத்திரைகள் முதலில் வாய் உலர்தல், தலை சுற்றல், வயிற்றுப்போக்கு என சின்னச்சின்ன பக்க விளைவுகளைத் தரலாம். இரண்டு நாட்களில் இவை சரியாகிவிடும். ஆனால், மாத்திரைகளையும் அந்த இரண்டு நாட்களோடு நிறுத்த வேண்டும். அப்படியில்லாமல் மாதக்கணக்காக மாத்திரை பயன்படுத்தினால், நாளாக ஆக ரத்த அழுத்தம் குறைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு வரை ஏற்படலாம்.
இன்னொரு சீரியஸான பாதிப்பு, நாம் அந்த மாத்திரைகளுக்கு அடிமையாகி விடுவது. ஒரு மாத்திரையில் ஆரம்பித்து, பிறகு இரண்டு, நான்கு என அதிகமாகி மாதக்கணக்காக டாக்டர் அட்வைஸ் இல்லாமலேயே நினைத்த நேரத்தில் போட வைக்கும். அது பெரிய ஆபத்து. கேன்சர் எச்சரிக்கை' இப்படி தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்குத்தான்.
தூக்க மாத்திரைகள் போடும் சிலரிடம் நடந்த ஆய்வில் முதல்கட்டமாக இப்படிச் சொல்லியிருந்தாலும், இதை உறுதிப்படுத்த இன்னும் சில நாள் ஆகலாம். ஆனால், இன்று இருக்கும் இளைஞர்களுக்கு இந்த எச்சரிக்கை நல்ல பலனைத் தரும். ஏனெனில், முன்பெல்லாம் வயதானவர்கள் தான் தூக்கம் வராமல் தவித்து, மாத்திரை வேணும் என கேட்பார்கள். இப்போது முப்பது வயதுப் பெண்களே 'தூக்கம் வரல' என எங்களிடம் வாறாங்க!' என்று அதிர்ச்சியைக் கூட்டினார் கிருத்திகா.
தூக்கம் வரவில்லை என்னும் சாதாரண பிரச்னை கேன்சரில் கொண்டு போய் விடுமா?' - நித்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்லீப் சயின்ஸ் நிறுவனர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். 'மருந்து, மாத்திரைகள் எல்லாவற்றிலுமே சிறிய அளவில் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். இருமலுக்குக் குடிக்கிற சிரப்லயே தூக்கம் வர வைக்கிற மருந்து இருக்கத்தானே செய்யுது? தூக்க மாத்திரைகளைப் பொறுத்த வரைக்கும் டாக்டர்களோட பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் யாரும் வாங்கிட முடியாது. மெடிக்கல்ல நிச்சயமா டாக்டர் துண்டு இல்லாமல் கொடுக்க மாட்டார்கள்.
ஒரே நேரத்தில் அதிகமான தூக்க மாத்திரைகளை எடுப்பதற்கு அப்பால் அது உடலில் பாதிப்பை உண்டாக்குவது. அதுகூட உயிரைப் பறிக்கும் அளவு போகாது என்பது தான் என் கருத்து. தூக்க மாத்திரைகளால் கேன்சர் எனும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவி்ல்லை. அதனால் யாரும் பீதியடையத் தேவையில்லை.
அதே நேரம் மாத்திரைகள் எடுக்கும் போது பக்க விளைவுகளுக்குப் பயப்படுபவர்கள், உடம்பிற்கு தேவையான தூக்கம் கிடைக்காத போது ஏற்படும் விளைவுகளையும் பார்க்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாவிடின், மன அழுத்தத்தோடு, கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம்' என்றவர், 'மாத்திரைகளைத் தாண்டி, சில சிகிச்சைகள், உடற்பயிற்சிகள் மூலமாவும் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்' என்கிற ஆறுதல் தகவலும் தருகிறார்.
பொதுவாக மனிதனை சிறிய அளவிலான மயக்க நிலைக்குக் கொண்டு போவதற்கான மருந்துகளே தூக்க மாத்திரைகளில் இருக்கும். நரம்பு மண்டலத்தில் லேசான பாதிப்பை ஏற்படுத்தவல்ல அந்த மருந்துகள்... கேன்சருக்குப் பாதை அமைத்துக் கொடுப்பதை மருத்துவ உலகம் அனுமதிக்காது என்று நம்புவோம்!
ka,


.thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக