WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

குழந்தைகளை படுத்தும் திருகுவலி!


குழந்தைகளை படுத்தும் திருகுவலி!
[ 03:02:44 03-02-2012 ]

குழந்தைகள் அம்மா வயிற்றை விட்டு வெளியெ வந்த பிறகு முதல் 3 மாதங்களில் திடீர் திடீரென வீல்.. வீல்.. என்று கதறி அழும். என்ன தான் சமாதானம் செய்தாலும்* குழந்தைகள் அழுகையை நிறுத்தாது. விடாமல் அழுவதால் குழந்தையின் முகம் சிவந்து உடல் முழுவதும் வியர்த்து விடும்.

* பிறந்த குழந்தை இதுபோன்று விடாமல் அழுவது சாதாரணமானது தான். ஆகையால் இதைக் கண்டு பெற்றொர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தானாகவெ சரியாகி விடும். பொதுவாக ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வரை குழந்தைகள் அழும்.

* அதிகபட்சம் போனால் 2மணி நெரம் வரை அழலாம். ஆனால் வயிற்றில் திருகு வலி அல்லது தசைப்பிடிப்பது காரணமாக அவதிப்படும் குழந்தைகள் இன்னும் கூடுதல் நெரம் வில்லு வைக்கும். இத்தகைய குழந்தைகள் வீட்டையே தூக்கும் அளவுக்கு தாங்க முடியாத ஓசையுடன் அழும்.

* அதிலும் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது பிறகு தானாக சக நிலைக்கு திரும்பி விடும். சில குழந்தைகள் திடீர் திடீரென விட்டு விட்டு அழும். இது குழந்தையின் அடிவயிற்று தசையில் உருவாகும் வலியைபோக்க குழந்தைகள் தலையை தூக்குவதற்காக முயற்சி செய்யும் பொது கால்கள் வளையும் அல்லவா, அந்த தன்மையையும் பொறுத்து இருக்கும்.

* திருகுவலி அல்லது வயிற்று தசைப்பிழப்பால் அவதிப்படும் குழந்தைகள் முகத்தை பார்த்தால் வலியால் தவிப்பது தெரியும். குழந்தைகளின் முகம் சிவந்து விடும். சில குழந்தைகள் காற்றை அதிகமாக வெளிவிடும்.

* அடிவயிற்று தசைப்பிழப்பு திருகு வலி ஆகிய பிரச்சினைகள் இருக்கும் குழந்தைகள் மட்டும்தான் இதுபொன்று வில்லு வைக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் சூல்நிலைக்கு தகுந்தவாறு தங்களை ஆட்ட செய்வதால் கூட இது நடக்கலாம்.

* அதே நெரம் அதிக நேரம் அழுவதன் காரணமாகவும் அதிகமான கோபம்- எரிச்சலுடன் காணப்படுவதன் காரணமாகவும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் போகும்.

சமாளிப்பது எப்படி:

இதுபோன்று குழந்தைகள் வீறிட்டு அழுவதை சமாளிக்க கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு பெரிதும் உதவும்.

1. உங்கள் குழந்தையின் உடல் இயக்கங்கள் உணர்வுகளை நன்றாக கவனித்து மனப்பாடம் செய்து கொள்ளுள்கள்.

2. குழந்தைகள் தூங்குவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த நெரத்தில் குழந்தைகளை தூங்குவதற்கு பழக்கப் படுத்துங்கள்.

3. குழந்தைகளை மாலை வேளையில் குளிப்பாட்டுங்கள். பிறகு பால் கொடுங்கள். இதன் மூலம் குழந்தைகளை அமைதியான தூக்கத்துக்கு தயார் செய்ய முடியும்.

4. குழந்தைகளை ஒரே இடத்தில் தூங்க வையுங்கள். இடத்துக்கு இடம் மாற்றி தூங்க வைக்கக் கூடாது.

5. குழந்தை வீல் வீல் என அழும்போது கொஞ்ச நேரம் பொறுமையாக பாருங்கள். அழுகையை நிறுத்தினால் நீங்கள் ஒன்றும் செய்ய வெண்டாம். ஒருவேளை நிறுத்தவில்லை என்றால் 10 அல்லது 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அதை சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். உதாரணமாக மெதுவாக தட்டிக் கொடுக்கலாம். மெதுவாக அங்குமிங்குமாக நடந்து செல்லலாம். தலையை செல்லமாக வருடிக் கொடுக்கலாம். இதில் அவரவருக்கு பிடித்தமான செய்கைகளை செய்யலாம். ஆனால் உங்கள் செய்கைகள் எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு மேலும் எரிச்சல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

6. குழந்தைகள் தூக்குவதற்கு முன்பாக சில நிமிடங்கள் வரை அழுவதற்கு நீங்கள் அனுமதிக்க வெண்டும்.

7. குழந்தைகளின் உடம்போடு உங்களுடைய உடம்பை (தாய்-தந்தையரில் தாய் சிறந்த சாய்ஸ்) தோள்பகுதியுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் உடல் மீது அதிகமான அழுத்தம் கொடுத்து விடக் கூடாது. இது மிகவும் முக்கியம்.

8. குழுந்தையை கையில் தூக்கிக் கொண்டு நடக்கும்போது அதனுடைய அடிவயிறு உங்களுடைய தோளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுள்கள். ஒரு செகண்டுக்கு ஒரு ஸ்டெப் வீதம் நடந்தால் பொதும்.

9. ஒரெ இடத்தில் நின்று கொண்டு குழந்தையை மெதுவாக தட்டிக் கொடுத்துக் கொண்டே தோள்பட்டையை அங்குமிங்குமாக மெதுவாக அசையுங்கள். அதுபோல குழந்தையை மேலும் கீழுமாக எக்காரணம் கொண்டும் குலுக்கக் கூடாது.

10. குளிப்பாட்டும் போது லேசான சூட்டுடன் அதாவது வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்ட வெண்டும்.

11. எண்ணெய் அல்லது லோஸனால் குழந்தையின் உடம்பை மெதுவாக மசாஜ் செய்யலாம்.

12. சீரான மெதுவான அசைவுகள் கொண்ட இருக்கைகளில் குழந்தைகளை அமர வைக்கலாம்.

13. குழந்தைகள் எந்த செய்கையை எந்தப் பொருளை விருபுகிறதோ கூடுமானவரை அவற்றை பயன்படுத்தியே சமாதானப்படுத்த வெண்டும்.

14. குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்று குமிழிகளை முழுங்கி விடாமல் தடுக்க வெண்டும். அதற்கு பால் பாட்டிலின் மீது பொருத்தியுள்ள ரப்பரில் துளை சிறியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

15. குழந்தைகள் இருக்கும் இடத்தில் அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளவும்.

16. குழந்தைகள் தூக்கத்தில் இருந்து விழிக்கும்பொது அவர்களாகவெ விழித்துக் கொள்ளட்டும். ரொம்ப நேரமாக தூங்குகிறதே இப்படி தூங்கினால் எப்போது பால் குடிப்பது, என்று கவலைப்பட்டுக் கொண்டு குழந்தையின் தூக்கத்துக்கு இடையூறு செய்ய வெண்டாம்.



ந்த ப திவு  viyapu.com  நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக