1.
இருமல்-சளி நீங்க
இருமல்,
சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மரு
ந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10
மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம்.
அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக கொதிக்க வைத்து 75
மில்லி ஆனவுட ன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி,
இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவார ணம் கிடைக்கும்.
2.
ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி
சித்த
மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இர ண்டுடன் 2 மிளகும் சேர்த்து,
அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை
இவ்வாறு மென் றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகு
ம்.
3.
காணாக்கடிக்கு
எந்த
பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்
கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை
ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50
மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில்
குணமாகும்.
வெற்றிலை,
பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன்,
ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.
5. வாத
நோய் நீங்க
வாத
நோய்களை குணமாக்கும் “வாத நாராயணா” எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு
முக்கிய மூலப் பொருளாகும்.
6.
தீப்புண் குணமாக
தீப்புண்
குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை
வில் அந்த புண் குண மாகும்.
7.
நுரையீரல் பலப்பட
8.
வயிற்றுவலி நீங்க
9.
சர்க்கரையின் அளவு கட்டுப்பட
10.
விஷக்கடி குணமாக
உ
டலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும்.
சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு
வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
11. இருமல்
குறைய
வெற்றிலைச்
சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பி ட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல்,
மூச்சுத் திணறல் குணமாகும்.
12.
அஜீரணக் கோளாறு அகல
வெற்றிலை 2
அல்லது மூன்று எடுத்து அத னுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய் ச்சி
குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும்.
வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும்
சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளா றுகள்
நீங்கும்.
13. தோல்
வியாதிக்கு
100 மி.லி.
தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்த வுடன் வடிகட்டி
பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால்,
எளிதில் குணமாகும்.
14. தலைவலி
நீங்க
வெற்றிலைக்கு மயக்கத்தைப்போக்கும் குண முண்டு.
மூன்று வெற்றிலைகளை எடு த்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம்
கற்பூரத்தைப் போட்டு நன் றாக குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்று போ ட்டால் தலைவலி
பறந்துபோகும்.
15.
தீப்புண் ஆற
தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து
கட்டலாம்.
16.
அல்சர்
அல்சர்
உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே
உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை
ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு
ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல்
குணமாகும்.
17. தேள்
விஷம்
இரண்டு
வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று
விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினை யும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறி
யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக